நேபாளத்திற்கு புதிய பிரதமர்

கடந்த சில நாட்களாக நேபாளத்தில் காணப்பட்ட மக்கள் போராட்டத்திற்கு பின்னர் அந்நாடு இராணுவ கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த போராட்டமானது ஜென் Z போராட்டம் என அழைக்கபட்டதோடு (Gen Z protest) அந்நாட்டின் ஊழல், வாரிசு அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களை முடக்கல் போன்ற காரணிகளால் அந்நாட்டு இலைஞர்கள் மற்றும் பொது மக்களால் ஆராம்பிக்கபட்டிருந்தது. இதன்போது ஐம்பதிற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு அந்நாட்டின் பாராளுமன்றம், உட்பட பல அரச கட்டிடங்கள் தீக்கிரையாக்கபட்டது . சிறைச்சாலை கைதிகள் 54 பேர்…

Read More

பிரான்சின் புதிய பிரதமராக மேக்ரோனின் நண்பனின் பெயர் முன்மொழிவு

நம்பிக்கையில்லா பிரேரணையின் 24 மணித்தியாலத்திற்கு பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தனது நண்பனான செபஸ்தியன் லேகொர்னு (Sébastien Lecornu) வை பிரான்சின் இரு வருடங்களில் தெரிவான 5 வது பிரதமராக முன் மொழிந்துள்ளார். 39 வயதான லேகொர்னு பிரான்சின் பாதுகாப்பு அமைச்சராக கடைமயாற்றியிருந்தார். இவரிற்கு முன்னதாக பயொரு (Bayrou) பிரான்ஸ் பிரதமரக கடமையாற்றியிருந்தார். பிரான்சு பாராளுமன்றத்தில் 3 பிரிவுகள் காணப்படுவதோடு மக்ரோணிற்கு பெரும்பான்மை இன்மையே இந்த அரசியல் தடுமாற்றத்திற்கு காரணமாகும். இதனால் பல தடவை மக்ரோணிற்கு…

Read More

ஜப்பானிய பிரதமர் இராஜினாமா

ஜப்பானிய பிரதமர் சிகேரூ இஷிபா (Shigeru Ishiba) தமது லிபரல் கட்சியில் பிழவு ஏற்படுவதை தடுக்க தமது பிரதம பதவியினை இராஜினாமா செய்துள்ளார். இவர் 2024ம் ஆண்டு தொடக்கம் பிரதமர் பதவியில் இருப்பதோடு இவரின் காலத்தில் ஜப்பானிய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது என மக்கள் கோபமடைந்த நிலையில் இவரின் லிபரல் ஜனநாயக கொமேய்டோ கூட்டணி உயர் மற்றும் கீழ்மட்ட அமைச்சரவை பெரும்பான்மையை இழந்தது.

Read More

இரு தடவை சந்திரனிற்கு சென்ற ஜிம் லொவெல் காலமானார்

1928 வருடம் பிறந்த ஜிம் லொவெல் தனது 97ம் வயதில் காலமானார். இவர் சந்திரனிற்கு இரு தடவை பயணித்த விண்கல வீரராவார். இவர் 1968 வருடம் செலுத்தப்பட்ட அப்பலோ 8 இலும் 1970 வருடம் செலுத்தப்பட்ட அப்பலோ 13 விண்கலத்திலும் பயணித்திருந்தார். ஆனால் இவர் சந்திரனில் காலடி எடுத்து வைக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது. மேலும் விண்வெளியிற்கு நான்கு முறை பயணித்த முதலாம் விண்கல வீரர் ஆவார்.

Read More

உலக பிளாஸ்டிக் மாசு தடுப்பு மாநாடு ஜினீவாவில்

உலக பிளாஸ்டிக் மாசு தடுப்பு மாநாடு கடந்த 4ம் திகதி ஜினீவாவில் ஆரம்பமானதோடு உலகளாவிய உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கொள்ள உள்ளது. பிலாஸ்டிக் பாவனை பற்றி அகில உலக தேசிய கூட்டமைப்பின் தலைமை செயலாளர் மதுர் பிலிப் (Mathur Filipp) தெரிவித்தற்கு அமைய 2024 வருடம் 500 மில்லியன் டன்  பிலாஸ்டிக் பாவைக்கு எடுக்கபட்டுள்ளதோடு 400 மில்லியன் டன் கழிவாக ஒதுக்கபட்டதாக தெரிவித்தார்.

Read More

பிரேசில் முன்னால் ஜனாதிபதி வீட்டுக்காவலில்

பிரேசில் நாட்டின் முன்னால் ஜனாதிபதி ஜயிர் போல்செனாரோ(Jair Bolsonaro) 2023 ம் ஆண்டு வெற்றி பெற்ற லூலா சில்வாவின்(Luiz Inácio Lula da Silva) முடிவினை மாற்ற முயற்சி செய்ததாக நிறுபிக்கபட்டு அந்நாட்டு நீதிமன்றம் போல்செனாரோவினை வீட்டு காவலில் வைத்தது. கடந்த மாதம் போல்செனாரோ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட கட்டுபாடுகளை மீறியதால் இந்த வீட்டு காவல் முடிவு விடுக்கப்பட்டுள்ளது. போல்செனாரோ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நெருங்கிய தொடர்பு உடையவர் என்பதோடு மேற்படி நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிராக பிரேசிலுக்கு…

Read More

தமிழ் சினிமாவின் இன்னொரு நகைச்சுவை கலைஞர் காலமானார்

தமிழ் சினிமா உலகினை தனது நகைச்சுவை ஆற்றலினால் ஆக்கிரமித்த மதன் பாப் தனது 71ம் வயதில் காலமானார். அவர் நடித்த தெனாலி மற்றும் பிரண்ட்ஸ் திரைப்படங்கள் அவரின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்திருந்தது.

Read More

ஒரு ஓவரில் 18 பந்துகள் வீசிய ஹேஸ்டிங்

இங்கிலாந்தில் இடம்பெற்ற லெஜண்ட்ஸ் உலக கோப்பை கிரிகெட் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையில் இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா 74 இற்கு அனைத்து விக்கெட் இழந்ததோடு பாகிஸ்தான் அணியினர் துடுப்பாடிய போது முன்னால் அவுஸ்திரேலிய வேகபந்து வீச்சாளர் ஜோன் ஹேஸ்டிங்(John Hastings) 8ம் ஓவரில் செலுத்திய 18 பந்துகளில் 5 பந்துகளே சரியான பந்துகலானதோடு அதன் மூலம் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது

Read More

தாய்லாந்து -காம்போஜியா இடையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்து

நான்கு நாட்களாக தொடர்ந்த தாய்லாந்து -காம்போஜியா இடையிலான போரானது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் தலைமையில் மலேசியாவின் க்வலாலம்பூரில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்தில் தாய்லாந்தின் கடமையில் உள்ள பிரதமர் பும்தம் விஜெசாய் மற்றும் காம்போஜிய ஹுன் மனெட் ஆகியோர் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு கைச்சாத்திட்டனர். காலனித்துவ காலத்தில் இருந்து தொடரும் இந்த போரானது இடையிடையே உக்கிரமாவதோடு யுநெஸ்கோ உலக புராதன ஸ்தலமான ப்றேஹா விஹாரா(Preah Vihear Temple) விகாரையை மையமாக கொண்டு யுத்தம் தொடர்ந்துள்ளதோடு கடந்த மே…

Read More

உலகின் மிகப்பெறிய அணையினை அமைக்க சீனா முடிவு

திபெத் நாட்டின் மிகப்பெறிய நதியான யாளுங் டிசங்போவினை(Yarlung Tsangpo) மறித்து உலகின் மிகப்பெரிய அணையினை சீனா அமைக்கவுள்ளது. இது 2057 kmநீளமும் , 6000m உயரமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. இது 2030 ம் வருடம் திட்டம் நிறைவு செய்ய உத்தேசித்துள்ளதோடு. இதன்மூலம் 300 பில்லியன் kwh மின் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படவுள்ளது.

Read More