ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தமது நாட்டின் சமாதான பேச்சுவார்த்தையில் பங்குபெறும் என செலன்ச்கி எதிர்பார்ப்பு

யுக்ரேனிய ஜனாதிபதி வோல்டிமையர் செலன்ச்கி(Volodymyr Zelenskiy) தமது நாட்டிற்கும் ருசியாவிற்கும் இடையில் காணப்படும் யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வருவதற்கான சமாதான பேச்சுவார்த்தையில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா பங்கேற்கும் என எதிர்பார்பதாக கூறினார். அமெரிக்க புதிய ஜனாதிபதி ட்ரம்ப் உக்ரேனிய ரசிய போர் பற்றி ரசிய ஜனாதிபதியுடன் கலந்துரையாட உத்தேசித்துள்ளதாக கூறியிருந்த நிலையில் ரசிய ஜனாதிபதி புடின் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து இவ்விடயதினை கலந்துரையாட வேண்டும் எனக்கூரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

காசாவில் போர் நிறுத்த இஸ்ரேலிய அமைச்சரவையும் இணக்கம்

நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் காசாவில் போர் நிறுத்த இஸ்ரேலிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் ஹமாஸ் இயக்கம் போர் நிறுத்த இணக்கம் தெரிவித்த நிலையில் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் காசாவில் இருக்கும் பணயக் கைதிகளை தேடி 630 உதவும் கனரக வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த 15 மாதங்களாக இந்த போர் இடம்பெற்று வருகின்றது.

Read More

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் சத்தியப்பிரமாணம்

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டானல்ட் ட்ரம்ப் பதவியேற்றார். இவர் தனது இரண்டாம் பதவிக்காலத்தினை இவ்வாறு ஆரம்பிப்பதோடு இந்த பதிவியை ஏற்கும் போது பல தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். *மெக்ஸிகோ வளைகுடா மற்றும் பனாமா கால்வாய் போன்றவற்றை மீண்டும் அமெரிக்க கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரல் * எல்லை பிரைச்சினைகளை தீர்த்தல் . *ஆண் பெண் என இரு வர்க்கம் மாத்திரமே காணப்பட வேண்டும். *சக்தி கொள்கையை வலுப்படுத்தல். *பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து வெளியேறல். போன்றவை பிரதானமாக சுட்டிக்காட்டபட்ட்து.

Read More

தமது நாட்டில் இருந்து பிரான்சு படையினரை வெளியேறுமாறு ஐவரி கோஸ்ட் கோரிக்கை.

ஆபிரிக்காவின் மீதான பிரான்சின் இராணுவ ஆட்சியை எதிர்க்கும் போக்கின் விளைவாகவே ஐவரி கோஸ்ட் அந்த வரிசையில் புதிதாக இணைந்துகொண்ட மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் ஒன்றாக அமைகிறது. அந்நாட்டின் ஜனாதிபதி Alassane Ouattara தனது வருட இறுதி உரையில் இந்த வெளியேறல் இவ்வருட ஜனவரி முதல் இடம்பெறும் என தெரிவித்தார். கடந்த இரு வருடங்களுள் ஏற்பட்ட பிரான்சு எதிர்ப்பு காரணமாக மாலி,புர்கினோ பாஸோ, நைகர் உள்ளடங்கலாக பல மேற்கு ஆப்ரிக்க நாடுகள் பிரான்சினை வெளியேற்றியது. அண்மையில் செனஹல், செட்(Senegal, chad)…

Read More

ரசியாவின் எரிவாயு யுக்ரேன் ஊடாக ஐரோப்பா செல்லும் மார்க்கத்திற்கு தடை

ஐரோப்பாவிற்கு யுக்ரேன் ஊடாக குழாய் வழியே சென்ற ரசியாவின் எரிவாயு இனிமேல் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. யுக்ரேன் உடனான ஒப்பந்தம் 2019 ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் இந்த ஊடுகடத்தல் 2025 ம் ஆண்டு ஜனவாரி மாதத்தில் இருந்து நிறுத்தபட்டுள்ளது. ரசியாவின் அந்நிய நாடுகள் மீதான தலையீட்டின் காரணமாக யுக்ரேன் ரசியாவின் எரிவாயு கொள்வனவு செய்வதை 2015ம் ஆண்டு தொடக்கம் நிறுத்தி இருந்தது. இது ரசியா கிறிமியா நாட்டினை தன்னுடன் இணைத்து கொண்டதன் பின்னராகும். *பாதிப்படையும் நாடுகள்…

Read More

தென்கொரிய ஜனாதிபதியை கைது செய்ய உத்தரவு

தனது ஆட்சியின் போது தன் பலத்தினை பிழையாக பயன்படுத்தினார் என அந்நாட்டின் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில் அவரை கைது செய்யுமாறு அந்நாட்டின் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. கடந்த வருடம் டிசெம்பர் 3 ம் திகதி இராணுவ ஆட்சியினை இவர் அறிவிதித்திருந்ததோடு. இதன் பின்னரே அந்நாட்டில் கலவரங்கள் உருவாகின. இவரின் இச்செயல் பலராலும் எதிர்க்கபட்டதோடு அந்நாட்டின் பாராளுமன்றத்தினால் கடந்த 14ம் திகதி ஜனாதிபதியை பதவி விளக்கினர். எனினும் இதனை முடிவு செய்ய வேண்டியது அந்நாட்டின் நீதிமன்றம் என்பதால்…

Read More

100 வருடம் உயிர்வாழ்ந்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி

அமெரிக்காவின்  1977 தொடக்கம் 1981 வரை ஜனாதிபதியாக இருந்த ஜிம்மி கார்டர்(Jimmy Carter) அவரது 100 ம் வயதில் காலமானார். இவர் அதிக காலம் உயிர்வாழ்ந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் முதலாவது முன்னாள் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. *ஜிம்மி கார்டர் அமெரிக்காவின் 39 வது ஜனாதிபதியாவார். *தனது ஆட்சியின் போது 1978 இல் எகிப்து மற்றும் இஸ்ரேல் இற்கு இடையில் சமாதான பேச்சுவார்த்தையை மேற்கொண்டு அது 1979 இல் வெற்றியை கண்டது. *1979 ம் ஆண்டு டெஹ்ரானில் இஸ்லாமிய…

Read More

அசர்பைஜான் விமானம் ரஷ்யாவின் எல்லையில் வைத்து சுடப்பட்டதா?

டிசெம்பர் மாதம் 25 ம் திகதி பகு நகரில் இருந்து பயணம் செய்த J2-8243 இலக்க அசர்பைஜானிய விமானம் கஸ்பியன் கடலிற்கு அருகாமையில் விபத்திற்கு உள்ளானது. இதனை அடுத்து பலர் இது ரசியாவின் செயல் என கூறியிருந்த நிலையில் பூட்டின் அசர்பைஜான் தலைவரிடம் மன்னிப்பு கோரியுள்ளமை இதனை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த விபத்தில் 38 பயணிகள் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர். உக்ரேன் ரசியாவின் Grozny, Mozdok மற்றும் Vladikavkaz நகரங்களிற்கு drone தாக்குதல் நடத்தி இருந்ததோடு இதன்போது…

Read More

கிரீன்லாந்து விற்கப்படாது என அறிவிப்பு

அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்(Donald Trump) தேர்வாகிய பின்னர் நாட்டின் எல்லைகளின் கட்டுப்பாட்டினை தன் கட்டுப்பாட்டின் கீல் கொண்டுவரப் போவதாக கூறியிருந்தார். இதனையடுத்து கிரீன்லாந்தின் பிரதமர் Múte Bourup Egede(7ஆம் பிரதமர் 2021 ஏப்ரல் தொடக்கம்) கிரீன்லாந்து விற்பனைக்கு இந்த கருத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்குமாறு “கிரின்லாந்து விற்பனைக்கு இல்லை” என்பதை தெரிவித்திருகின்றார்

Read More