கலீதா சியா தேர்தலில் போட்டியிட முடிவு

வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ள பங்களாதேஷ் பொதுத் தேர்தலை முன்னிட்டு, முன்னாள் பிரதமர் கலீதா சியா மீண்டும் தேர்தலில் நிற்பார் என்று பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி அறிவித்துள்ளது. இப்போது 80 வயதாகும் கலீதா சியாவும், அவரது மகன் தரிக் ரஹ்மானும் கட்சியின் புதிய வேட்பாளர் பட்டியலில் உள்ளனர். கலீதா சியா 1991 முதல் 1996 வரை முதன்முறையாகவும், பின்னர் 2001 முதல் 2006 வரை இரண்டாவது முறையாகவும் நாட்டை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப்…

Read More

நைஜீரியாவின் நாம்தி காணுவிற்கு ஆயுள் தண்டனை

நைஜீரியாவில் பெரும் கவனம் ஈர்த்த வழக்கில், பிரிவினைவாத இயக்கத் தலைவர் நாம்தி காணுவுக்கு(Nnamdi Kanu) ஏழு பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. தனது சொந்த மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரி செயல்பட்டு வந்த IPOB – Indigenous People of Biafra அமைப்பை நிறுவிய காணு, தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறை, கொலைகள் மற்றும் பொதுமக்கள் வாழ்க்கையை முடக்கிவைத்த “வீட்டிலேயே இருங்கள்” உத்தரவுகளுக்கு காரணமாக பாதுகாப்பு அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். அரச…

Read More

G20 மாநாட்டில் கலந்து கொள்ளாது இருக்க நைஜீரிய ஜனாதிபதி தீர்மானம்

இந்த வாரத்தின் ஆரம்பத்தில்,நைஜீரியாவின் நாட்டின் வடமேற்கு பகுதியில் துப்பாக்கிதாரி ஒருவரால் கடத்தப்பட்ட 24 பள்ளி மாணவிகளை மீட்கும் முயற்சிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சமூக அமைப்புகளின் தலைவர்கள், பாதுகாப்பு படைகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். உலகின் முன்னணி வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் பங்கேற்கும் G20 மாநாட்டில் கலந்து கொள்ள நைஜீரிய ஜனாதிபதி போலா திநுபு ( Bola Tinubu)புதன்கிழமை தென் ஆப்பிரிக்கா புறப்பட இருந்தார். ஆனால், மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவம் மற்றும் வேறு…

Read More

ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மனிதாபிமானத்திற்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் இந்த வாரம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நீண்டுவரும் அரசியல் பதட்டங்களையும், அவரை பதவியில் இருந்து தள்ளிய கடுமையான கிளர்ச்சியையும் அனுபவித்த பிறகு, நாடு மீண்டும் முன்னேற இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம் என்று அவரது எதிரிகள் நம்புகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ஹசினா இந்தியாவில் தங்கியுள்ளார். அன்றே, வன்முறை பரவிய சூழலில், 15 ஆண்டுகள் நீடித்த அவரது…

Read More

உலகின் வயது முதிர்ந்த ஜனாதிபதியாக கமரோன் நாட்டின் Paul Biya தேர்வு

அண்மையில் இடம்பெற்ற கமரோன் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று 92 வயதான பவுல் பியா (Paul Biya) உலகின் வயது முதிர்ந்த ஜனாதிபதியாக தெரிவானார். இவரினது ஆட்சி காலம் முடிவடையும் போது அவரிற்கு 99 வயதாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Read More

அயர்லாந்தின் ஜனாதிபதியாகிறார் கதரின் கனொளி

இடதுசாரியான கதரின் கனோலி(Catherine Connolly) அயர்லாந்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார். இவர் பைன் காஎல் (Fine Gael) கட்சியின் ஹீதர் ஹும்ப்ரேயை (Heather Humphreys ) 63% வெற்றிபெற்றார். இவர் எதிர்வரும் கிழமையில் டப்ளின் மாளிகையில் அயர்லாந்தின் பத்தாவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். இதேவேளை தற்போதைய ஜனாதிபதி (Michael D Higgins) கனோளியின் வெற்றியிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Read More

கிழக்கு திமோர் ASEAN அமைப்பில் இணைவு

தென்கிழக்கு ஆசிய ஒன்றியமான ASEAN அமைப்பில் கிழக்கு திமோர் இணைந்துள்ளது. 1990 இற்கு பின்னர் நாடாக கிழக்கு திமோர் பதிவாகின்றது. அதற்கமைய ASEAN அமைப்பின் நடைபெறும் மாநாட்டில் மற்றைய பத்து அங்கத்துவ நாடுகளுடன் கிழக்கு திமோரின் கொடியும் மேடையில் ஏற்றபட்டிருந்தது என ஊடகங்கள் தெரிவித்தன. ” இன்று வரலாறு புதுப்பிக்கப்பட்டது ” என கிழக்கு திமோர் பிரதமர் சானாஸ் குஸ்மாவோ (Xanana Gusmao) தெரிவித்தார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி இந்த மாநாட்டிற்கு கலந்துகொள்ள சமூகமளித்த போது கம்போடியா…

Read More

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஆசியான் மாநாடு மலேசியாவில்

47 வது தென்கிழக்ஆசிய நாடுகளின் ஆசியான்(ASEAN) மாநாடு மலேசியாவில் அந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராக்ஹீம் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு அமெரிக்கா,சீனா,இந்தியா உற்பட மேலும் பல நாடுகள் கலந்துகொள்ளவுள்ளது. இதன்போது அமெரிக்க ஜனாதிபதி கட்டாயமாக கலந்துகொள்ளவுள்ளதோடு இந்த பயணத்தின் பின்னர் அவர் சீனா செல்லவும் திட்டமிட்டுள்ளார். இந்திய பிரதமர் தன்னால் இம்மாநாடு இடம்பெறும் க்வலாலம்பூர்ற்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் அவர் இணைய வழி மூலம் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக தனது எக்ஸ் தலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Read More

பேருவின் தலைநகரிற்கு அவசரகால பிரகடனம்

தொடர்ந்து பேருவில் இடம்பெற்ற பதற்ற நிலைமையினை அடுத்து அந்நாட்டின் முன்னால் ஜனாதிபதி டினா போலறுட்(Dina Boluarte) பதவி நீக்கப்பட்டு 38 வயதான ஜோஸ் ஜெரி (José Jerí) ஜனாதிபதியாக பதவியேற்றார். பேருவின் முதல் பெண் ஜனாதிபதியான டினா போலறுட் 2022ம் வருடம் ஜனாதிபதியாக பதவியேற்றதோடு அவருடைய காலப் பகுதியில் இடம்பெற்ற பண சுத்திகரிப்பு மற்றும் ஊழல்கள் காரணமாக நாட்டில் தொடர்ந்தும் கிளர்ச்சிகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. அத்தோடு நாட்டினுள் இடம்பெற்ற குற்ற செயல்களை தடுக்கவும் அவரின் ஆட்சி…

Read More

மடகஸ்காரில் இராணுவ ஆட்சி

z-தலைமுறையின் போராட்டத்தின் பின்னர் மடகஸ்காரில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அந்நாட்டின் ஜனாதிபதி அன்ரி ரஜோளினா (Andry Rajoelina) தனது பதவியை விட்டு நாட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இதனையடுத்து அந்நாட்டின் இராணுவம் ஆட்சியை தன் வசம் எடுத்ததோடு அரச நிறுவனங்களின் செயற்பாட்டினை நிறுத்தியது. இதனையடுத்து மடகஸ்கர் இராணுவம் அடுத்த இரு வருடங்களுக்கு ஆட்சி மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. இதற்கு z-தலைமுறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு ஐநா, மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் இந்த முடிவை எதிர்த்துள்ளது. இராணுவ விசேட அதிரடி படையின்…

Read More