சிறுவர்களுக்கான புனைகதையிற்கான புக்கா் பரிசு வழங்க தீர்மானம்

சிறுவர்களுக்கான புனைகதையிற்கான புக்கா் பரிசு வழங்க AKO தொண்டு நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதற்காக 50,000 பவுண்ட் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளதோடு இதுவரை காலமும் புக்கர் பரிசு மற்றும் சர்வதேச புக்கர் பரிசு மாத்திரமே வழங்கப்பட்டு வந்தது.

ஆங்கில இலக்கியத்தில் மிக உயரிய பரிசாகக் கருதப்படும் புக்கா் பரிசு கடந்த 1969-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. இதைத்தொடா்ந்து, சா்வதேச புக்கா் பரிசு 2005-ஆம் முதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிறுவர்களுக்கான புத்தங்கள் பிரிவில் புதிய பரிசை புக்கா் பரிசு அடுத்த வருடம் முதல் வழங்கப்படவுள்ளது.

2024 ம் வருடத்திற்கான புக்கர் பரிசு Samantha Harvey எழுதிய Orbital என்ற நாவலிற்கு கிடைத்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *