கலீதா சியா தேர்தலில் போட்டியிட முடிவு
வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ள பங்களாதேஷ் பொதுத் தேர்தலை முன்னிட்டு, முன்னாள் பிரதமர் கலீதா சியா மீண்டும் தேர்தலில் நிற்பார் என்று பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி அறிவித்துள்ளது. இப்போது 80 வயதாகும் கலீதா சியாவும், அவரது மகன் தரிக் ரஹ்மானும் கட்சியின் புதிய வேட்பாளர் பட்டியலில் உள்ளனர். கலீதா சியா 1991 முதல் 1996 வரை முதன்முறையாகவும், பின்னர் 2001 முதல் 2006 வரை இரண்டாவது முறையாகவும் நாட்டை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப்…
நைஜீரியாவின் நாம்தி காணுவிற்கு ஆயுள் தண்டனை
நைஜீரியாவில் பெரும் கவனம் ஈர்த்த வழக்கில், பிரிவினைவாத இயக்கத் தலைவர் நாம்தி காணுவுக்கு(Nnamdi Kanu) ஏழு பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. தனது சொந்த மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரி செயல்பட்டு வந்த IPOB – Indigenous People of Biafra அமைப்பை நிறுவிய காணு, தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறை, கொலைகள் மற்றும் பொதுமக்கள் வாழ்க்கையை முடக்கிவைத்த “வீட்டிலேயே இருங்கள்” உத்தரவுகளுக்கு காரணமாக பாதுகாப்பு அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். அரச…
G20 மாநாட்டில் கலந்து கொள்ளாது இருக்க நைஜீரிய ஜனாதிபதி தீர்மானம்
இந்த வாரத்தின் ஆரம்பத்தில்,நைஜீரியாவின் நாட்டின் வடமேற்கு பகுதியில் துப்பாக்கிதாரி ஒருவரால் கடத்தப்பட்ட 24 பள்ளி மாணவிகளை மீட்கும் முயற்சிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சமூக அமைப்புகளின் தலைவர்கள், பாதுகாப்பு படைகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். உலகின் முன்னணி வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் பங்கேற்கும் G20 மாநாட்டில் கலந்து கொள்ள நைஜீரிய ஜனாதிபதி போலா திநுபு ( Bola Tinubu)புதன்கிழமை தென் ஆப்பிரிக்கா புறப்பட இருந்தார். ஆனால், மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவம் மற்றும் வேறு…
ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மனிதாபிமானத்திற்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் இந்த வாரம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நீண்டுவரும் அரசியல் பதட்டங்களையும், அவரை பதவியில் இருந்து தள்ளிய கடுமையான கிளர்ச்சியையும் அனுபவித்த பிறகு, நாடு மீண்டும் முன்னேற இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம் என்று அவரது எதிரிகள் நம்புகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ஹசினா இந்தியாவில் தங்கியுள்ளார். அன்றே, வன்முறை பரவிய சூழலில், 15 ஆண்டுகள் நீடித்த அவரது…
புக்கர் விருது ஹங்கேரிய எழுத்தாளர் ஒருவருக்கு
எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான புக்கர் விருது ஹங்கேரிய புலம்பெயர் பிருத்தானிய எழுத்தாளரான டேவிட் சலே இற்கு இந்த விருது கிடைத்துள்ளது. 58 வயதான டேவிட் சலே யிற்கு இவ்விருதுடன் ஐம்பதாயிரம் பவுன் பண பரிசும் கிடைத்துள்ளது. இவர் புக்கர் விருது பெற்ற முதல் ஹங்கேரிய புலம்பெயர் பிருத்தானிய எழுத்தாளர் என்ற சிறப்பினையும் பெற்றுள்ளார்.
T20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரராக பாபர் அசாம்
இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற துடுப்பாட்ட வீரர் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையினை கடந்த தென்னாப்ரிக்காவிற்கான போட்டியில் பாபர் அசாம் முறியடித்தார். பாபர் அசாம் 123 போட்டிகளில் பங்குபற்றி 4,234 ஓட்டங்கள் பெற்றுள்ளதோடு, இதுவரை முன்னிலையில் இருந்த இந்திய வீரரான ரோஹித் ஷர்மா 153 போட்டிகளில் பங்குபற்றி 4,231 ஓட்டங்களுடன் இரண்டாமிடத்திலும், மூன்றாமிடத்தில் விராட் கோலி 117 போட்டிகளில் பங்குபற்றி 4,188 இடம்பிடித்துள்ளனர்.
விகிபிடியாவிற்கு போட்டியாக வருகிறது க்ரோகிபிடியா
இலான் மாஸ்க் க்ரோகிபிடியா(Grokipedia) எனும் இணைய தகவல் களஞ்சியத்தினை வெளியிட்டுள்ளார். இந்த க்ரோகிபிடியா இத்தனை காலமும் இயங்கிய விக்கிபிடியாவின் இடத்தினை கூடிய சீக்கிரம் பிடிக்கும் என இலான் மாஸ்க் எதிர்பார்கின்றார். கடந்த காலங்களில் இலான் மாஸ்க் விக்கிபிடியா தன்னிச்சையான நோக்கத்துடன் செயற்படுவதாக விமர்சித்திருந்தார் .அத்தோடு அதற்கு நிதி வழங்குவதை நிறுத்துமாறும் மக்களிடம் கோரியிருந்தார். அதன் அடிப்படையில் க்ரோகிபிடியா உண்மையை தவிர வேறொன்றையும் கூறப்போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார். தற்போது க்ரோகிபிடியா 885,279 கட்டுரைகளை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதேவேளை…
ஜேம்ஸ் ஆண்டர்சனிற்கு நயிட் பட்டம்
இங்கிலாந்து கிரிக்கட் வீரரும் தனது நாட்டிற்கு அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் நயிட் பதவி வழங்கி கெளரவிக்கபட்டுள்ளார். இங்கிலாந்தின் வின்சர்ட் மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் இளவரசி ஆன் இந்த பட்டத்தினை வழங்கி அவரை கெளரவித்தார். இவர் 704 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவர் முத்தையா முரளிதரன் (800) மற்றும் சேன் வோர்ன் (708) ஆகியோரிற்கு அடுத்த அதிகூடிய டெஸ்ட் விக்கெட் பெற்றவர் என்ற வரிசையில் இருக்கின்றார்.
இவ்வருட செந்தரவுப் புத்தக பட்டியலில் அழியும் உயிரினங்களில் ஆர்க்டிக் நீர் நாய் உட்பட அரைவாசி பறவை இனங்களும் உள்ளடங்கியுள்ளது
சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு (IUCN) மூலம் வருடா வருடம் வெளியிடும் உலகின் அழிவுக்கு உட்பட்டு வரும் உயிரினங்கள் அடங்கிய செந்தரவுப் புத்தகம்( சிவப்பு தகவல் புத்தகம்) அல்லது சிவப்பு பட்டியல் இவ்வருடமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆர்க்டிக் நீர்நாய் (Arctic seals) மற்றும் 60% மான பறவை இனங்களின் தொகையானது குறைந்து வருகின்றது என கண்டறியப்பட்டுள்ளது. பனிப்பாறைகள் உறைவதனால் ஆர்க்டிக் நீர்நாய்களின் இளைப்பாறல்,இனபெருக்கம் மற்றும் பாலூட்டல் போன்ற செயற்பாடுகளிற்கு தடை ஏற்பட்டுள்ளதால் இவற்றின் இருப்பு பாதிப்புக்கு…
சர்வதேச விண்வெளி மையத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல ஜப்பான் விண்வெளி ஓடம் ஒன்றினை ஏவியது
ஜப்பான் விண்வெளி முகவர் நிலையம் மிக முக்கியமான தானியங்கி விண்வெளி ஓடம் ஒன்றினை கடந்த வாரம் ஏவியது. இதன் பிரதான நோக்கமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வது காணப்படுகிறது. இந்த H3 rocket ஆனது HTV-X1 விண்கலத்தில் இணைக்கப்பட்டு ஏவப்பட்டது. அதற்கமைய H3 rocket விண்வெளி ஓடம் குறித்த எல்லையில் விடுவிக்கப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தினை அடைய அடையவுள்ளது. விண்வெளி மையத்தில் தங்கி இருக்கும் ஜப்பானிய விண்வெளி வீரரான கிமியா யூய் (Kimiya Yui)…
