Latest posts

All

உலக பெண்களின் ஆற்றல் திறன்களை அபிவிருத்தி செய்யும் தலைமையகம் பிஜிங்கில் திறந்து வைப்பு

உலக பெண்களின் ஆற்றல் திறன்களை அபிவிருத்தி செய்யும் தலைமையகம் சீன பெண்கள் சங்கம் மற்றும் சீன வெளிவிவகார அபிவிருத்தி முகவர் அமைப்பு ஒருங்கிணைப்பில் பிஜிங்கில் திறந்து வைக்கப்பட்டது.

Read More

பொருளியளிற்கான நோபல் பரிசு மூன்று பொருளியலாளர்களிற்கு

2025 வருடத்திற்கான பொருளியளிற்கான நோபல் பரிசு மூன்று பொருளியலாளர்கள் இடையே பகிரப்பட்டுள்ளது. இந்த பரிசின் அரைவாசி பெறுமதியான பணம் ஜோஎல் மொகியர் (Joel Mokyr) என்பவருக்கும் மிகுதியான அரைவாசி பணம் பிலிப்பே அகியன் ( Philippe Aghion) மற்றும் பீடர் ஹோவிட்  (Peter Howitt) ஆகியோரிடையே பகிரப்பட்டுள்ளது. 

Read More

இவ்வருட சமாதானத்திற்கான நோபல் பரிசு மரியா கொரினோ மச்சாடோவிற்கு

2025-ம் ஆண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு வெனுசுலாவினை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மரியா கொரினோ மச்சாடோவிற்கு(María Corina Machado) நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. வெனிசுலாவில் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடும் இவர் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க போராடி வருகிறார். இவர் ஒரு அரசியல்வாதி என்பதோடு கைத்தொழில் பொறியியலாளர்(Industrial Engineer) என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 2021 ம் ஆண்டு Henrique Capriles Radonski இற்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார்.

Read More

மெண்டேலாவின் பேரன் ஈஸ்ராயிலில் இருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்

தென் ஆப்ரிக்க முன்னால் ஜனாதிபதியும் நிறவெரியிற்கு எதிர்ப்பு தெரிவித்த மேண்டேளாவின் பேரன் மண்டேலா மேண்டேலா (Mandla Mandela) கடந்த தினத்தில் ஜோஹன்னஸ்பெர்க் நகரிற்கு திரும்பினார். இவர் இஸ்ரேயில் நாட்டில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் . காஸாவிற்கு உதவி வழங்க முற்பட்டமையினால் இவர் உட்பட மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். இவர் Global Sumud Flotilla அமைப்பில் உள்ளதோடு இவரிற்கு முன்னர் ஸ்வீடன் சமூக செயற்பாட்டாளரான கிரேட் தன்பர்கும்(Greta Thunberg) கைது செய்யபட்டிருந்தார்.

Read More

கால்பந்து வரலாற்றின் முதல் பில்லியனர் கிறிஸ்டியானோ ரொனால்டோ

புளூம்பெர்க் குறியீட்டின்படி, கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் நிகர மதிப்பு 1.4 மில்லியன் அமெரிக்க டாலர் என கணிக்கபட்டுளது; இதன் மூலம், கால்பந்து வரலாற்றின் முதல் பில்லியனர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார்சவுதி கிளப் அல்-நஸ்ர்ருடன் கடந்த ஜுன் மாதம் 400 மில்லியன் டொலர் ஒப்பந்தம் கைச்சாத்திட்டதை அடுத்தே இவரின் பெறுமதி அதிகரித்துள்ளது ,மேலும் விளம்பர ஒப்பந்தங்கள், தன் வணிகப் பேரரசு மூலம் இந்த உச்சத்தைத் தொட்டுள்ளார் ரொனால்டோ! கிறிஸ்டியானோ ரொனால்டோ CR7 என அழைக்கபடுவதும்…

Read More

இவ்வருட பௌதீகவியலிற்கான நோபல் பரிசு அமெரிக்கா விஞ்ஞாணிகள் மூவரிற்கு

இவ்வருடதிற்கான பௌதீகவியலிற்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞாணிகளான ஜோன் கிளார்க் (John Clarke), மைக்கல் எச் டேவோர்ட் (Michel H. Devoret) , ஜோன் எம் மார்டினஸ் (John M. Martinis) ஆகியோரிற்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் எதிர்கால சந்ததியினறிற்கு க்வாண்டம் (quantum ) தொழினுட்ப விருத்தியிற்கு மேற்கொள்ளும் ஆய்வுகளினை முன்னிட்டு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்களின் ஆய்வு நடவடிக்கைகளுக்காக நோபல் பண பரிசான 11 மில்லியன் ஸ்வீடன் கோனார் (1 மில்லியன் அமெரிக்க டாலர்) பணமானது அவர்கள்…

Read More

ஜப்பானில் முதல் முதலாக பெண் ஒருவர் பிரதமராக வாய்ப்பு

ஜப்பானின் முன்னால் பொருளாதார பாதுகாப்பு அமைச்சரான சானே தகாசி (Sanae Takaichi) ஜப்பானின் முதல் பெண் பிரதமாராக தெரிவாக உள்ளதாக எதிர்வு கூறபடுகிறது. இவர் தற்போதைய ஆளும் கட்சியின் தலைவராக தெரிவாகியுள்ளதோடு. இம்மாதம் மத்தியில் ஜப்பானிய பிரதமாரக பதவியேற்பார் என எதிர்பார்க்க படுகிறது. இவர் சின்சோ அபே பிரதமர் காலத்திலும் அதற்கு முன்னரும் பல அமைச்சு பதவிகளில் கடமையாற்றிருந்தார். இவரின் தலைமை பதவியேற்பின் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி தகாசி அவர்களை ஜப்பானின் முதலாவது “பெண் பிரதமர்” என…

Read More

தலிபானியர்கள் இணையத்திற்கு பிரவேசிக்கும் வசதி துண்டிப்பு

தலிபானியர்கள் இணையத்தை பாவிப்பதை ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசு கடந்த தினத்தில் தடை செய்தது. இணையம் மூலம் பாலியல் வீடியோக்கள் மற்றும் குற்றச்செயல்கள் பரவுவதை தடுப்பதற்க்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் நாற்பது மில்லியன் மக்கள் உலக நாடுகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் காபுல் நகர விமான நிலைய செயற்பாடுகளும் தடைபட்டுள்ளது. பின்னர் மக்கள் எதிர்ப்பிற்கு மத்தியில் மீண்டும் இனைய வசதி ஸ்தாபிக்கபட்டுள்ளது.

Read More

“ட்ரம்ப்” இனை கொலை செய்ய முயற்சித்த நபர் குற்றவாளி என ஜூரி சபை தீர்மானம்

கடந்த வருடம் “ட்ரம்ப்” இனை அவரினது “கோல்ப்” மைதானத்தில் கொலை செய்ய முயற்சித்த ரயன் ரவுத்(Ryan Routh) குற்றவாளி என 7 பேர் கொண்ட ஜூரி சபை மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது கழுத்தினை பேனை ஒன்றினால் குத்தி தற்கொலை செய்ய முற்பட்டிருந்தார். உடனடியாக செயற்பட்ட நீதிமன்ற அதிகாரிகள் அவரினை நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றினர். ரயன் ரவுத் இலக்கமில்லாத துப்பாக்கி வைத்திருந்தமை, ட்ரம்ப்இனை கொலை செய்ய முயற்சித்தமை ஆகியவற்றிற்கு குற்றவாளியாக தீர்மானிக்கபட்ட்டார்.

Read More

ஹிமாலய மலைத்தொடரில் நிகழ்த்திய புகை குண்டு காட்சியின் பின் சர்ச்சை

ஆர்க் ‘டேரிக்ஸ் (Arc’teryx) எனும் உடை தயாரிப்பு நிறுவனம் ஹிமாலய மலையின் திபெத் பகுதியில் புகை குண்டுகளை உபயோகித்து ஒரு dragon ஒன்றினை உருவாக்கியிருந்தது. இது அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை மக்கள் நிராகரிக்கும் வகையில் அமைந்துள்ளதோடு, இதனை அடுத்து சீனா இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவால் மக்கள் அந்த தயாரிப்பை புறக்கணிக்கும் தன்மை உருவாகியுள்ளது. இதனையடுத்து அந்த நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

Read More